மத்திய மலைநாட்டின் மேற்குப் பகுதியில் இடியுடன் கூடிய மழைபெய்யும் போது பலத்த காற்றும் வீசும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
அதேவேளை நாட்டின் மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங் களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் மாலையில் ஊவா, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.