BREAKING NEWS

ஹக்கீம், ரிசாத் பேச்சைக்கேட்ட ஊவா முஸ்லிம்கள் தமது பிரதிநிதித்துவத்தை இழந்து நிற்கின்றனர்

ஊவா மாகாண சபையை இப்போது ஐக்கிய தேசியக்கட்சி கைப்பற்றியுள்ளது. ஊவா மாகாண சபை தேர்தலின் பொது ரஊப் ஹக்கீமும், ரிசாதும் இணைந்து அத்தேர்தலில் போட்டியிட்டு முஸ்லிம்களின் வாக்ககளை பிரிக்காமல் இருந்திருந்தால் நிச்சயம்
ஐ தே கவில் முஸ்லிம் உறுப்பினர் இருவர் தெரிவாகியிருப்பர். ஆவர்களில் ஒருவர் மாகாண அமைச்சராகவும் தெரிவு செய்யப்பட்டிருக்கலாம். மேற்படி ஹக்கீம், ரிசாத் ஆகிய இரண்டு அமைச்சர்கள்; மஹிந்தவின் பேச்சைக்கேட்டே முஸ்லிம்களின் வாக்குகளை பிரிக்க முயல்கிறார்கள் என்பதை உலமா கட்சி மிக தெளிவாக தெரிவித்தது. அதனை ஊவாவை சேர்ந்த சிலர் கேட்காததன் விளைவு இன்று அம்மக்கள் ஆளுங்கட்சிப்பிரதிநிதி ஒருவரை பெற முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். இத்தனையும் செய்த ஹக்கீமும், ரிசாதும் மீண்டும் அமைச்சர்களாகி சொகுசாகி விட்டனர். ஆனால் அவர்களால் வழி கெடுக்கப்பட்ட ஊவா முஸ்லிம்கள் தமது பிரதிநிதித்துவத்தை இழந்து பரிதாபமாக நிற்கின்றனர்.


Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar