
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கியதேசிய கட்சி வசமா?சமூர்த்தி வீடமைப்பு அமைச்சு ஊடாக முன்னேடுக்கபடுகின்ற வீடமைப்பு கடன் வழங்குவதற்கான ஏறாவூர்க்கான விண்ணப்ப படிவம் பிரதி அமைச்சர் MS. அமீர் அலியின் சிபார்சுக்கு அமைவாக ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் ஊடாக விநியோகம் செய்யப்படுவதாக அறியமுடிகின்றது. இவர் தனி நபராக இருந்தால் யார் ஊடாகவும் விநியோகம் செய்ய முடியும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளராக இருந்து கொண்டு அதன் கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளர், மாகாண சபை உறுப்பினர் ஏறாவூர் இருந்தும் இன்னும் ஒரு கட்சி அமைப்பாளர் ஊடாக முன்னேடுக்க படுவது நியம்தானா? கட்சி உறுப்பினர்கள் தனது விருப்புக்கு ஏற்ப செயற்பட முடியுமா? கட்சி உறுப்பினர்களுக்கு என்று ஒரு கட்டுப்பாடு இல்லையா? இவ்வாறு செயற்பட்டால் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெற்றி பெற்றுக்கொள்ள முடியுமா?இந்த கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைந்து செயற்படுவதற்காக தலைமையின் பங்களிப்பு என்ன?


Post a Comment