ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆட்சியின் கீழுள்ள ஒரேயொரு மாநகரசபையான கல்முனையின் முதலாவது பதிவு செய்யப்பட்ட ஜும்ஆ பள்ளிவாயல் உள்ள தைக்கா வீதியின் பரிதாபமான நிலையே இது. இந்த வீதி சுமார் 40 வருடங்களாக திருத்தப்படவில்லை. கடந்த கால தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரசுக்கே இந்த வீதியில் உள்ள மக்களில் 99.9 வீதமான மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனாலும் மக்கள் ஏமற்றப்பட்டது தவிர வேறு இல்லை.
தற்போதைய கல்முனை மேயர் நிசாம் காரியப்பர் கடந்த மாநகர தேர்தல் நேரத்தில் இந்த வீதியில் உள்ள தவ்ஹீத் பள்ளிக்கு தொழ வந்தார். அதன் பின் இந்த வீதிப்பக்கமே தலவைத்து படுக்கவில்லை என மக்கள் கூறுகின்றனர். முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இந்த வீதி மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டதே மிச்சம். இனியாவது கல்முனை தலைமையிலான கட்சியில் ஒன்று படுவார்களா?
-உலமா கட்சி ஊடக பிரிவு.




Post a Comment