BREAKING NEWS

மன்சூர் MP அப்படி என்னதான் பாராளுமன்றத்தில் பேசினார் ஒரு விமர்சனப் பார்வை... Inbox x


றிம்சி ஜலீல்-
கடந்த 21ம் திகதி மன்சூர் MP பாராளுமன்றத்தில் ஆவேசமாகப் பேசியதாக முஸ்லிம் காங்கிரஸ் மஞ்சள் கவர் போராளிகளினால் ஒரு போலியான கருத்தையும் விம்பத்தையும் இந்த சமூகத்துக்கு நடித்துக்காட்ட முனைகின்றதை புரிந்துகொள்ள முடிகின்றது.
பாராளுமன்றத்தில் மன்சூர் MP எடுத்துக் கொண்ட விடையம் தலைவர் அஷ்ரப் அவர்களின் காலம் முதல் அன்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வரை அதிகமாக பேசப்பட்டு வரக்கூடிய ஒரு விடையம் என்பதை அரசியல் மட்டத்தில் உள்ள அனைவரும் அறிவார்கள்.
ஆனால் இங்கு முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளினால் மன்சூர் MP மட்டும்தான் இந்த விடையத்தை ஆவேசமாகப் பேசினார் அதுவும் அரசாங்கத்திற்க்குள்ளே இருந்து கொண்டு இப்படி பேச முடியுமா..? என்ற கேள்வியை கேட்டு அதை புகழ்ந்து அது மன்சூர் MP யினால் மட்டுமே முடியும் என்று போராளிகள் எழுதுவது மிகவும் கோமாளித்தனமான விடையமாகும்.
உண்மையான விடையம் என்னவென்றால் முஸ்லிம்களுக்கு குரல் கொடுத்த தலைவர் அஷ்ரபாக இருக்கட்டும் அல்லது அன்மையில் இந்த விடையம் தொடர்பாக குரல் கொடுத்து வருகின்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீனாக இருக்கட்டும் இவர்கள் அனைவருமே அரசாங்கத்துக்குள்ளே இருந்துதான் தனது கருத்துக்களை ஆவேசமாக வெளியிட்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை.
அத்தோடு மு.கா மஞ்சல் கவர் போராளிகள் இன்னும் ஒரு விடையத்தை இந்த சமூகத்துக்கு போளியாக படம்பிடித்துக்காட்ட முயல்கின்றார்கள் அதுதான் அன்மையில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியமைக்கு இதுவும் ஒரு காரணம் என்பதாக பீத்திக் கொள்கின்றனர் உண்மையில் அவ்வாறு ஒப்பந்தம் செய்திருந்தால் இன்னும் ஏன் பாராளுமன்றத்தில் பேசும் படமாக மட்டும் மறியிருக்க வேண்டும்..??
மன்சூர் MP பற்றி மு.கா போராளிகள் இவ்வாறு பல போலிகளை எழுத ஒரே ஒரு காரணம் மட்டுமே அதாவது மன்சூர் MP யின் ஊரில் அன்மையில் மக்கள் காங்கிரஸ் சார்பாக V C இஸ்மாயில் பாராளுமன்றம் சென்றதேயாகும் என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மையாகும்...

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar