BREAKING NEWS

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு V8 மற்றும் Montero போன்ற சொகுசு வாகனங்களை வழங்குவதில்லை

MP ஓய்வூதியம் மற்றும் வாகன பேர்மிட்டை ரத்து செய்வது தொடர்பில் அரசு கவனம் செலுத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியம் மற்றும் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்வது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, தற்போது அமைச்சுக்களுக்குச் சொந்தமான 150 சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு V8 மற்றும் Montero போன்ற சொகுசு வாகனங்களை வழங்குவதில்லை
எனவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான உண்மைகளை மீளாய்வு செய்த பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எம்.பி.க்களுக்கு துப்பாக்கி மற்றும் துப்பாக்கி பயிற்சி வழங்குதல், மக்கள் பிரதிநிதிகளுக்கான வீடுகள் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அமைச்சர்களின் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் விசேட குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது. குறித்த குழுவின் பரிந்துரையை கருத்தில் கொண்டு அமைச்சர்களின் சிறப்புரிமைகள் குறித்து தீர்மானிக்கப்படும் எனத் தெரியவருகிறது. எம்.பி.க்களின் சிறப்புரிமைகள் தொடர்பில் நாம் நேற்று பாராளுமன்ற அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, இது தொடர்பில் அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வ அறிவித்தல் வழங்கவில்லை என தெரிவித்தார். அதுவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான வீடுகள் மற்றும் ஏனைய வசதிகளுக்கான ஏற்பாடுகள் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக அண்மையில் நடைபெற்ற செயலமர்வில் அவர்களின் சிறப்புரிமைகள் தொடர்பான உண்மைகள் விளக்கப்பட வேண்டும் என கூறப்பட்ட போதிலும் அது நடைபெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar