தமிழரசுக் கட்சி - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தம்
Posted by aljazeeralanka.com on March 23, 2025 in | Comments : 0
இலங்கை தமிழரசுக் கட்சி
- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தம்!
இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர் இடையில் இடம்பெற்ற ஒப்பந்தத்தின் புரிந்துணர்வு அடிப்படையில் ஒப்பந்தம் ஒன்று கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெறும் வட்டாரங்களில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு.
➡️கிழக்கு மாகாணத்தில்⬅️
📍மூதூர் பிரதேச சபை - தவிசாளர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், உப தவிசாளர் - இலங்கை தமிழரசுக் கட்சி
📍கோறளைப்பற்று பிரதேச சபையில் (வாழைச்சேனை) ஆகியவற்றில் தவிசாளர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், உப தவிசாளர் - இலங்கை தமிழரசுக் கட்சி
📍கல்முனை மாநகர சபையில் மேயர் பதவி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் துணை மேயர் இலங்கை தமிழரசுக் கட்சி,
📍நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் - இலங்கை தமிழரசுக் கட்சி, உப தவிசாளர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
📍பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உப தவிசாளர் - இலங்கை தமிழரசுக் கட்சி
மேற்குறித்த ஒழுங்கு முறையில் பதவிகளை பகிர்ந்து கொள்வது என உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) தலைவர் ரவூப் ஹக்கீம் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்,,,,,
சிந்தித்து வாக்களிங்கள் அன்பான வாக்காளர்களே🙏🙏❤️
வடமாகாணத்தில் 97%மான ஆசனங்களையும் அதிகாரத்தையும் தமிழ்கட்சிகளே பெறும்.காரணம் அங்கு 97%மான தமிழ்வாக்குகள் உள்ளது.ஆதலால் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழ்மகனே சபையை ஆட்சி செய்வான்!!
ஆகவே வடக்கில் முழுமையாக தாரைவார்த்ததைவிட், ACMCஉடன் இணைந்து மன்னாரில் பல சபைகளின் ஆதிக்கத்தை முழுமையாக கைப்பற்றி இருக்கலாம்!!
ஆனால் கிழக்கில் நம்மை விட மற்றைய இரண்டு இனங்களும் சனத்தொகையிலும் ! மற்றைய தமிழ் மற்றும் சிங்கள கட்சிகளும் ஓரளவு சமபலத்தில் உள்ளது.
இந்த நிலையில் கிழக்கில் இருக்கின்ற பல முஸ்லீம் கட்சிகளுடன் இணக்கப்பாட்டுக்கு SLMC டயஸ்போரா டலைவர் உடண்பாட்டுக்கு வந்திருக்கலாம். இதன் மூலம் சகல சபைகளிலும எமது அதிகாரத்தை நிச்சயப்படுத்தலாம்.
உதாரணமாக மூதூரில் SLMC+ACMC ஓரளவு சமபலத்திலும் அடுத்ததாக SJB அடுத்து சிறியளவில் அத்தாவுள்ளாவின் NC உள்ளது.இதில் SLMC+ SLMCஇணைந்தாலே முழுச் சபையும் நமக்கு கிடைக்கும்.இந்த சபையில் பாதியை தமிழ்கட்சிக்கு பங்கு எதற்கு!!!!
இதன்மூலம் கிழக்கு மாகாணம் முஸ்லீம்களுக்கு முழுச் சொந்தமானது என்ற அஷ்ரப் உருவாக்கிய தனித்துவத்தை பாதுகாத்து இருக்கலாம்!குறிப்பாக ACMC,NCஆகிய கட்சிகளுடன் இணைந்து குறைந்த பட்சம் முஸ்லீம்கள் அதிகமாக வாழ்கின்ற பிரதேச அதிகாரத்து முரைமையாக முஸ்லீம்கள் வசபாக்கி இருக்கலாம்!
கிழக்கில் 100%
அம்பாறையில் 4 கு பேற்பட்ட சிங்கள சபைகள்
மட்டக்களப்பில் 3கு மேற்பட்ட தமிழ்சபைகள்
திருகோணமலையில் :சிங்கள +1 தமிழ்மாநகரசபை உள்ளது
இந்த நிலையில் கிழக்கில் முஸ்லீம்கட்சிகளை முற்றாக ஒழிக்கும் தமிழ் டயஸ்போரா மற்றும்
இந்திய உளவுப் பிரிவின் மற்றுமொரு சதி ஹகீம் மூலம் அறங்கேற்றப்பட்டுள்ளது.
கடந்தகாலத்தில் மத்திய மாகாணசபை, புத்தளம் பொதுத் தேர்தலில் ACMC மற்றும் இதர முஸ்லீம் அமைப்புகளுடன் ஒன்றுபட்ட ஹகீம் தற்போது கிழக்கின் பாதியை அடகு வைப்பது துரோகத்தின் இறுதி அத்தியாயம்!
இதனை எதிரத்தும் இதற்கு எதிராகவும் கிழக்கு சமூகம் SLMCகு மரணபயத்தை இந்த தேர்தலில் வழங்கவேண்டும்!!
Fahmy Mohideen(UK)
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment