BREAKING NEWS

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தருக்கு மரண தண்டனை –

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தருக்கு மரண தண்டனை – கொழும்பு நிரந்தர மூவரடங்கிய உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தருக்கு மரண தண்டனை விதிக்குமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய உயர்நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது. போதுமான உளவுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்த போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது. இந்த வழக்கில், 2022 ஆம் ஆண்டு மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இரு பிரதிவாதிகளையும் குற்றமற்றவர்களாக விடுதலை செய்திருந்தது. அதற்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இவ்வழக்கில் பிரதிவாதிகள் தரப்பின் சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்த‌த்தில் சில‌ எருமைக‌ள் சொல்வ‌து போல் ஸ‌ஹ்ரான் குழு த‌மிழ் குர்ஆனை ப‌டித்து விட்டு 72 சொர்க்க‌லோக‌ க‌ன்னிக‌ளுக்காக‌ குண்டு வைக்க‌வில்லை என்ப‌தும் இத‌ற்கு பின்னால் அன்றைய‌ ஆட்சி, எதிர்க்க‌ட்சி, முஸ்லிம்க‌ளுக்கு எதிரான‌ வெளி நாட்டு ச‌க்திக‌ள் இருந்துள்ள‌ன‌ என்ப‌தும் தெளிவாகியுள்ள‌து.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar