BREAKING NEWS

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்து கடமையேற்க தடையா

இனவாதிகளின் அட்டகாசம் ....? கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு இன்று (10) பர்தா அணிந்து சென்ற முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்களை கடமையேற்க விடாது தடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. புதிய நியமனம் பெற்ற 06 பெண் உத்தியோகத்தர்கள் பர்தா அணிந்த நிலையில் இவ் வைத்தியசாலைக்கு சென்ற போது, அவர்களை கடமைக்கு அறிக்கை செய்யவிடாமல் இனவாதிகளினால் தடுக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்கள் அவர்களது கலாசார முறைப்படி உடை அணிய சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ள போதும், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை "தமிழர்களது" வைத்தியசாலை எனக்கூறி இவர்களை தடுத்துள்ளதாக தெரிய வருகிறது. கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் அவர்களே... இது உங்கள் கவனத்திற்கு..!!

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar