®பாடசாலை நேரத்தை அதிகரிப்பது உள்ளிட்ட அரசின் புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் எதிப்பை வெளியிட்டது..!
24,JULY 2025
இலங்கை ஆசிரியர் சங்கம் அரசின் கல்வி சீர்திருத்தங்களுக்கு கடும் எதிர்ப்பு.
அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்த சீர்திருத்தங்கள் ஆலோசனையின்றி அவசரமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கொள்கையில் முரண்பாடுகள் உள்ளதாகவும், மாணவர்களுக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், “இந்த சீர்திருத்தங்களுக்கு நாங்கள் முற்றிலும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இவை புதியவை அல்ல, ஏற்கனவே பேசப்பட்டவைதான். கல்வி அமைச்சர் ஒரு வகுப்பில் 30 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் எனக் கூறுகிறார். ஆனால், இவ்வாண்டு அவரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ஒரு வகுப்புக்கு 40 மாணவர்களை அனுமதிக்கிறது. இது எவ்வாறு ஒருமைப்பாடு உள்ளதாக இருக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், சீர்திருத்தங்கள் தேசிய கல்வி ஆணையத்தால் உருவாக்கப்பட வேண்டும், ஆனால் தேசிய கல்வி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது எனவும், இந்த நிறுவனத்துக்கு முழுமையான தொலைநோக்கு இல்லை எனவும் ஸ்டாலின் விமர்சித்தார். “இந்த சீர்திருத்தங்களை உருவாக்கிய குழு தேசிய கல்வி நிறுவனத்தில் உள்ளது. அவர்களுக்கு எந்தவித தொலைநோக்கும் இல்லை,” என்று அவர் கூறினார்.
“ஜனாதிபதி பாடசாலை இடைவிலகல்கள் குறித்து பேசினார். ஆனால், இந்த சீர்திருத்தங்கள் மாணவர்களின் இடைவிலகலை மேலும் அதிகரிக்கும்,” என்று அவர் எச்சரித்தார்.
பாடசாலை நேரத்தை நீட்டிக்கும் முன்மொழிவுகளையும் ஸ்டாலின் எதிர்த்தார். “ஆசிரியர்கள் மாலை 2 மணி வரை பணியில் இருக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இது குறித்து எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை. இத்தகைய தன்னிச்சையான முடிவுகளுக்கு நாங்கள் முற்றிலும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்,” என்று அவர் வலியுறுத்தினார்.
ஐக்கிய காங்கிரஸ் United Congress
ஐக்கிய காங்கிரஸ் என்ற அரசியல் கட்சி 2020ம் ஆண்டு உலமா கட்சியின் துணைக்கட்சியாக உருவாக்கப்பட்டது.
அன்று முதல் இலங்கையின் பிரபல்யமான கட்சியாக செயல்பாட்டில் உள்ளது.
ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக முபாறக் அப்துல் மஜீத் செயற்பட்டு வந்தார். 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் தனது தலைமை பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் 2024 ஜுன் மாதம் மீண்டும் ஐக்கிய காங்கிரசின் தலைவராக முபாறக் அப்துல் மஜீத் முப்தி நியமிக்கப்பட்டார். இக்கட்சியின் தற்போதைய பொதுச்செயலாளராக முஹம்மது சதீக் முப்தி செயற்படுகிறார்.
குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு: களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு.
===============================
1990.07.12 ஆந் திகதி புனித ஹஜ் கடமையினை நிறைவு செய்து வீடு திரும்பிய யாத்திரிகர்கள் மற்றும் வியாபாரிகள் கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் குருக்கள்மடம் எனும் இடத்தில் கடத்தி காணாமாலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டமை தொடர்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றும் வரும் வழக்கு இன்றைய தினம் (21.07.2025) திறந்த நீதிமன்றில் அழைக்கப்பட்டது.
கடந்த தவணையில் கௌரவ சட்டமா அதிபர், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோரை இன்று நீதிமன்றில் தோன்றுமாறு மன்று கட்டளையிட்டிருந்தது. அதற்கமைவாக இன்றைய தினம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் சட்டத்தரணிகள், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் மன்றிற்கு சமூகமளித்திருந்தனர். கௌரவ சட்டமா அதிபர் சார்பாக எவரும் இன்றைய தினம் கெளரவ மன்றில் தோன்றியிருக்கவில்லை.
கெளரவ மன்றிற்கு சமர்ப்பணத்தை மேற்கொண்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் சட்டத்தரணி " குருக்கள்மடம் மனிதப் படுகுழியானது முறையாக தோண்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே தமது அலுவலகம் தொடர்ந்தும் பேணி வருவதாகவும் குறித்த சந்தேகத்துக்கிடமான மனிதப் புதை குழி அமையப்பெற்றுள்ளதாக நியாயமாக நம்பப்படும் பிரதேசத்தைத் தோண்டுவதற்கான கட்டளையினை மன்று ஆக்குமிடத்து தாங்கள் அவதானிப்பாளர்களாகச் செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேற்படி சமர்ப்பணத்தை கருத்திற்கொண்ட கௌரவ நீதிமன்றம் குருக்கள்மடம் மனிதப் புதைகுழியை தோண்டுவதற்கான மீள் திட்ட வரைபை கெளரவ மன்றிற்குச் சமர்ப்பிக்குமாறு கொழும்பு சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரிக்கு கட்டளையாக்கியதோடு அடுத்த தவணைத் தினத்தில் மன்றில் முன்னிலையாகுமாறு சட்டமா அதிபருக்கும் கட்டளை ஆக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் முறைப்பாட்டாளரான அப்துல் மஜீத் ரவூப் சார்பில் குரல் இயக்கத்தின் தலைவர் சட்டத்தரணி முகைமீன் காலித் அவர்களோடு அதன் சட்டத்தரணிகளான முபாறக் முஅஸ்ஸம், ஹஸ்ஸான் றுஷ்தி, எஸ்.எம்.மனாருத்தீன், எப்.எச்.ஏ.அம்ஜாட், ஏ.எல்.ஆஸாத் ஆகியோர் இன்றைய தினம் கெளரவ மன்றில் தோன்றியிருந்தனர். குருக்கள்மடம் மனிதப் புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியினைப் பெற்றுக்கொடுக்கின்ற இடையறாப் பயணத்தில் குரல்கள் இயக்கம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது.
இன்னும் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு நாட்டில் தேர்தல்fள் எவையும் நடத்தப்படாது
இன்னும் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு நாட்டில் தேர்தல்fள் எவையும் நடத்தப்படாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதை கட்டாயமாக்கி, வாக்களிக்காதவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குருநாகலில் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2026-2029 காலப்பகுதிக்கான மூலோபாய திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக குருநாகல் மாவட்ட கட்சி குழுக்களுடன் மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாரியளவில் பணம் செலவிடப்படுவதைக் கருத்திற்கொண்டு, ஒரு தேர்தலின் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறான தீர்மானம் அமுல்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத் தேர்தலுக்கான வைப்புத்தொகையை அதிகரிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் சரோஜா போலின் கருத்துக்கு ஐக்கிய காங்கிரஸ் வரவேற்பு
முஸ்லிம் மார்க்க சட்டத்தை மாற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற அமைச்சர் சரோஜா போல் அவர்களின் கருத்தை ஐக்கிய காங்கிரஸ் வரவேற்பதுடன் இனியும் அதற்கு முயற்சிக்க கூடாது எனவும் வேண்டிக்கொண்டுள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் தலைவர் முபாறக் முப்தி தெரிவித்ததாவது,
கடந்த கால அரசாங்கங்கள் அரசை திறம்பட கொண்டு செல்ல முடியாத போது தமது இயலாமையை மறைக்க முஸ்லிம் திருமண சட்டத்திருத்தம் என்பதை ஊடக மயப்படுத்துவர்.
இதனால் மக்கள் திசை திருப்பப்பட்டு அரசாங்கத்தின் இயலாமைகளை மறந்து விடுவர். இதை மஹிந்த அரசிலும், நல்லாட்சி அரசில் அதிகமாகவும் கண்டோம்.
முஸ்லிம் சட்டங்களில் எத்தகைய திருத்தமும் செய்ய கூடாது என்பதை அன்று முதல் இன்று வரை சொல்லும் ஒரே அரசியல் கட்சி எமது கட்சி மட்டுமே. அச்சட்டங்களை அமுல் படுத்தும் போது உள்ள பௌதீக குறைபாடுகள் திர்க்கப்பட வேண்டுமே தவிர சட்டத்தில் கை வைக்க கூடாது.
முஸ்லிம் மார்க்க சட்டங்களை மாற்ற வேண்டும் என்ற கோட்டாபய ராஹபக்ஷவின் இனவாத சிந்தனை காரணமாகவே அவர் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை கொண்டு வந்து ஞானசார தேரர் தலைமையில் அமைப்பை ஏற்படுத்தி அதற்கு ஊது குழலாக சில விலை போன முஸ்லிம்களையும் நியமித்து அரச நிதியை வீணடித்தார். கடைசியில் நாட்டை விட்டு ஓடும் நிலை அவருக்கு வந்தது.
முஸ்லிம் திருமண சட்டத்தில் யார் கை வைக்க முனைந்தாலும் அவர்களின் அரசியல் சீரழிந்ததையே காண்கிறோம்.
ரவூப் ஹக்கீம் கூட முஸ்லிம் மார்க்ஜ சட்டத்தை மாற்றும் இத்தகைய போக்கிரித்தனத்தை செய்தார்.
ஆகவே தற்போதைய அரசாங்கம் முஸ்லிம் மார்க்க சட்டங்களில் கை வைக்க மாட்டோம் என பகிரங்கமாக அறிவித்திருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
முபாறக் அப்துல் மஜீத் முப்தி
தலைவர்
ஐக்கிய காங்கிரஸ்
14.7.2022
குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கில் திருப்புமுனை -நீதிமன்ற உத்தரவின் விபரம்
குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் மற்றும் சட்டமா அதிபருக்கு மன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்.
பாறுக் ஷிஹான்
1990.07.12 ஆந் திகதி புனித ஹஜ் கடமையை நிறைவு செய்து வீடு திரும்பிய யாத்திரிகர்கள் மற்றும் வியாபாரிகள் கல்முனை - மட்டக்களப்பு வீதியில் குருக்கள்மடம் எனும் இடத்தில் கடத்திக் காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்படட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட அப்துல் மஜீத் அப்துல் ரவூப் என்பவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கெளரவ நீதிவான் அவர்கள் குறித்த சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி அமைந்துள்ளதாக நியாயமாக சந்தேகிக்கப்படும் இடத்தைத் தோண்டுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கையிடுமாறு உரிய அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கட்டளையாக்கி இருந்தார்.
அதனடிப்படையில் நில அளவைத் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம், தொல்லியல் திணைக்களம், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், தடயவியல் மருத்துவம் மற்றும் நஞ்சியல் நிறுவகம் என்பன தமது ஆய்வுகளை மேற்கொண்டு குறித்த சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நியாயமாகச் சந்தேகிக்கப்படும் இடத்தைத் தோண்டுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை முடிவுறுத்தி மன்றுக்கு திட்ட வரைபையும் சமர்ப்பித்திருந்தனர்.
இந்நிலையில், மன்றுக்கு சமர்ப்பணங்களை மேற்கொண்டிருந்த களுவாஞ்சிக்குடி பொலிஸார் குறித்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று அதனை நீதிமன்றுக்கு அறிவிப்பதற்குத் தவணையொன்றை வழங்குமாறு மன்றுக்குத் தெரிவித்திருந்தனர். அதன் பிரகாரம், 04.10.2020 இல் சட்டமா அதிபரினால் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக குறித்த வழக்கானது கிடப்பிலிடப்பட்டிருந்தது.
இப்பின்னணியிலேயே இவ்வழக்கின் முறைப்பாட்டாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக 11.07.2025 ஆந் திகதியாகிய இன்று குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணியால் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட நகர்த்தல் பத்திரம் மூலம் குறித்த வழக்கானது திறந்த மன்றில் அழைக்கப்பட்டது. இதன்போது முறைப்பாட்டாளர் சார்பில் மன்றில் முன்னிலையாகி இருந்த சட்டத்தரணிகளின் சமர்ப்பணம் மற்றும் வழக்கேட்டை மிக நுணுக்கமாக ஆராய்ந்த நீதிமன்றமானது முறைப்பாட்டாளரின் முறைப்பாடானது நீதிமுறையாக அணுகப்படாமல் நிலுவையாக உள்ளமையானது நீதியின்பாற்பட்டதல்ல எனும் அடிப்படையில் குறித்த வழக்கை எதிர்வரும் 21.07.2025 க்கு தவணையிடுவதாகவும் குறித்த தினத்தில் மன்றில் முன்னிலையாகுமாறு சட்டமா அதிபருக்கும், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கும் களுவாஞ்சிக்குடி பொலிசாருக்கும் அறிவித்தல் அனுப்புமாறு கட்டளை ஆக்கியுள்ளார்.
குறித்த இவ்வழக்கில் முறைப்பாட்டாளர் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான முஹைமீன் காலித் , முபாறக் முஅஸ்ஸம் ஆகியோர் மன்றில் தோன்றி இருந்தனர்.
Kaluwanchikudy Magistrate Notices to parties in relation to Kurukkalmadam Mass Grave Case after 35 years.
On 12.07 1990, pilgrims returning home after performing the Hajj and traders travelling along the Kalmunai–Batticaloa road were allegedly abducted, killed, and buried in a mass grave at Kurukkalmadam. A complaint regarding this incident was lodged with the Kaluwanchikudy Police by Mr. Abdul Majeed Abdul Rauf, one of the affected parties.
Based on this complaint, in the year 2014, a case was filed before the Honourable Kaluwanchikudy Magistrate’s Court. The Honourable Magistrate, having considered the matter, ordered the relevant government departments and institutions to carry out preliminary procedures to excavate the suspected mass grave site and report to the court.
In compliance with this directive, the Department of Survey, the Geological and Mines Bureau, the Department of Archaeology, the Office on Missing Persons, and the Department of Forensic Medicine and Toxicology carried out their respective investigations. These authorities completed the preliminary procedures and submitted a draft proposal to the Honourable Court for the excavation of the area reasonably suspected to be a mass grave.
Subsequently, the Kaluwanchikudy Police informed the Honourable Court that they sought legal advice from the Honourable Attorney General regarding the matter and moved for a date to report back to court. Based on the advice issued by the Honourable Attorney General to the Kaluwanchikudy Police on 04.10.2020, the case was placed under pending status .
In this background, as per the instructions given by the complainant, the counsels representing the Voices Movement filed a motion before the Honourable Kaluwanchikudy Magistrate’s Court on 11.07.2025, requesting that the case be called in the open court. Upon hearing the comprehensive submissions made on behalf of the complainant and after a detailed review of the case records, the Honourable Court observed that the complaint had not been duly addressed through appropriate legal procedure and that the prolonged delay was contrary to the principles of justice. Accordingly, the Court postponed the matter to 21.07.2025 and issued directions for the Honourable Attorney General, the Office on Missing Persons, and the Kaluwanchikudy Police to appear before the Court on that date.
In this case, Attorneys-at-Law Mr. Muhaimeen Khalid and Mr. Mubarak Muazzam appeared on behalf of the complainant, representing the Voices Movement.
--
ACMC உறுப்புரிமைக்கு #தற்காலிக #தடை
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் அஸ்பர் JP அவர்கள் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயல்பட்டதால் அவரின் கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் S சுபைதீன் ஹாஜியார் அவர்கள் தெரிவித்தார்
மேலும் இத்தகவல் அஸ்வர் JP அவர்களுக்கு பதிவு தபால் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதால் தபால் ஒரிரு நாட்களில் அவருக்கு கிடைக்கலாம் என நம்பப்படுகிறது
இதேபோன்று ஓட்டமாவடி கோரளைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் முகமட் பைரூஸ் அவர்களின் கட்சி உறுப்புரிமை இடை நிறுத்தப்பட்டதாக அறிய முடிகின்றது
ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் தாக்குதல்
பாறுக் ஷிஹான்
ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் மீது – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் றியா மசூர் என்பவர் தலைமையிலான காடையர்கள் நேற்று (02) இரவு தாக்குதல் நடத்தியதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனது நண்பர்களுடன் ஊடகவியலாளர் மப்றூக் நேற்றிரவு அட்டாளைச்சேனை பொது மைதானத்துக்கு அருகில் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு காரில் வந்த அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் றியா என்பவரும், இன்னுமிருவரும் மப்றூக் மீது எதிர்பாராத விதமாக தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
”என்னைப் பற்றி எப்படி நீ செய்தி எழுதுவாய்” எனக் கேட்டவாறே, மப்றூக் மீது றியா மசூர் என்பவர் தாக்குதல் நடத்தியதாக, தனது பொலிஸ் முறைப்பாட்டில் ஊடகவியலாளர் மப்றூக் கூறியுள்ளார்.
றியா மசூர் மற்றும் அவருடன் வந்தவர்கள் மது அருந்தியிருந்ததாகவும் முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
றியா மசூர் அழைத்து வந்த காடையர்களுக்கு எதிராக, ஏற்கனவே பொதுமக்களைத் தாக்கியமை மற்றும் போதைவஸ்து பாவனை உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள் உள்ளதாகவும் தெரியவருகிறது.
அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் உள்ளிட்ட தனது நண்பர்களுடன் ஊடகவியலாளர் பேசிக் கொண்டிருந்த வேளையிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இதன்போது அங்கிருந்தவர்கள் தாக்குதலை தடுத்து நிறுத்தியதாகவும், இல்லா விட்டால் ஊடகவியலாளருக்கு – மேற்படி காடையர்கள் உயிராபத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் எனவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
மேலும் தாக்குதலை மேற்கொண்ட றியா மசூர் என்பவர், தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து விட்டுச் சென்றதாகவும், ஊடகவியலாளர் மப்றூக் – தனது முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்ளின் குருக்கள் மடம் புதை குழி
முஸ்லிம்ளின் குருக்கள் மடம் புதை குழி குறித்து 2022ம் ஆண்டு பிபிசியில் வெளிவந்த கட்டுரை ।।।।
கட்டுரை தகவல்
எழுதியவர்,யூ.எல்.மப்றூக்
பதவி,பிபிசி தமிழுக்காக
17 நவம்பர் 2022
விடுதலைப் புலிகள் கொன்றதாக கூறப்படும் 170 முஸ்லிம்கள் உடல்களை தோண்டி மத முறைப்படி அடக்கம் செய்யக் கோரிக்கை.
படக்குறிப்பு,
சம்மாந்துறையில் தையற்கடை நடத்தி வந்த ஹபீபுர் றஹ்மான் எனும் தமது குடும்பத்தின் மூத்த சகோதரர், குருக்கள் மடத்தில் புலிகளால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறுகின்றார் நஸீலா.
மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் பிரதேசத்தில் வைத்து கடத்தி, படுகொலை செய்து, அங்கேயே புதைக்கப்பட்ட சுமார் 170 முஸ்லிம்களின் உடல்களையும் தோண்டியெடுத்து, இஸ்லாமிய முறைப்படி மீளவும் அடக்கம் செய்வதற்கு சிபாரிசு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் 'காத்தான்குடி பள்ளிவாயில்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்' இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
மேற்படி ஆணைக்குழு முன்பாக - காத்தான்குடி பள்ளிவாயில்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.எம். ரஊப் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார்.
1990ஆம் ஆண்டு ஜுலை 12ஆம் தேதி - கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக வாகனங்களில் பயணித்துக் கொண்டிருந்த முஸ்லிம் பொதுமக்களை - தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர், ஆயுதமுனையில் கடத்திப் படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட அனைவரும் அம்பாரை, மட்டக்களப்பு மாவட்டம் சேர்ந்தவர்களாவர்.
ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டுத் திரும்பியோர், தொழிலுக்காக வெளியூர் சென்று வந்தோர் உட்பட பலர் - இதன்போது கடத்திப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களையே, தோண்டியெடுத்து, இஸ்லாமிய முறைப்படி மீளவும் அடக்கம் செய்வதற்கு சிபாரிசு செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக ரஊப் அடையாளம காட்டிய இடம்
படக்குறிப்பு,முஸ்லிம்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக ரஊப் அடையாளம காட்டிய இடம்
மூன்று கோரிக்கைகள்
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் குருக்கள் மடம் படுகொலை தொடர்பில் மூன்று கோரிக்கைகளை தாம் முன்வைத்துள்ளதாக ரஊப் குறிப்பிட்டார்.
குருக்கள் மடத்தில் 170 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டு, அந்த உடல்கள் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும். அந்தப் படுகொலை ஏன் மேற்கொள்ளப்பட்டது என்பதை சுயாதீன ஆணைக்குழு ஒன்றின் மூலம் ஆராய்ந்து கண்டறிய வேண்டும்.
குருக்கள் மடம் படுகொலை நடந்த காலப்பகுதியில், அநேகமான தமிழர் பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருந்தது. ராணுவத்தினர் தலைகாட்டும் போது மறைந்துகொள்ளும் புலிகள் இயக்கத்தவர்கள், ராணுவம் சென்ற பின்னர் ஊர்களுக்குள் மீண்டும் நடமாடத் தொடங்குவர்.
சிலவேளைகளில், புலிகள் அமைப்பினரைக் கட்டுப்படுத்துவதற்காக படையினர் களமிறங்கும்போது, இரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பரம் மோதல்கள் இடம்பெறுவதுமுண்டு.
இந்தக் காலப்பகுதியில் தமிழர் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லுறவு காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்கள் என்பதற்காகவே தனது சகோதரர்கள் இருவரும் கடத்திக் கொலை செய்யப்பட்டனர் என்கிறார் பௌசுல் ஹினாயா. குருக்கள் மடத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் தோண்டப்பட்டு இஸ்லாமிய முறைப்படை நல்லடக்கம் செய்யப்படுவது - தமக்கு திருப்தியை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறுகின்றார்.
புலிகள் கடத்தியதை கண்டவர் தகவல் கூறினார்
சம்மாந்துறையில் தையற்கடை நடத்தி வந்த ஹபீபுர் றஹ்மான் எனும் தமது குடும்பத்தின் மூத்த சகோதரர், குருக்கள் மடத்தில் புலிகளால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறுகின்றார் நஸீலா. இவர் அரச தொழில் புரிகின்றார்.
தனது சகோதரர் பயணித்த லாரியை புலிகள் கடத்திச் சென்றதை, அந்த வழியினால் பயணித்த ஒருவர் கண்டு வந்து - தங்களிடம் கூறியதாகவும் நஸீலா இதன்போது குறிப்பிட்டார்.
முஸ்லிம்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக ரஊப் அடையாளம் காட்டிய இடம்
1980களில் இருந்தே முஸ்லிம்கள் காணாமலாக்கப்படுதல், கடத்தப்படுதல், முஸ்லிம்களிடம் கப்பம் கோருதல் போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளதாகவும், இவற்றினை விடுதலைப் புலிகளும், தமிழ் ஆயுதக் குழுக்களுமே செய்து வந்ததாகவும் ரஊப் குறிப்பிடுகின்றார்.
குருக்கள் மடத்தில் ஒரு இடத்தை இந்த செய்தியாளரிடம் காட்டிய ரஊப், படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் அங்குதான் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
கடற்கரையை அண்டிய அந்த இடத்துக்கு அருகில், தற்போது ராணுவ முகாமொன்று அமைந்துள்ளது.
தொகுப்பு. முபாறக் முப்தி
நிந்தவூர்பேருந்து நிறுத்த நிழல்குடை?
பேருந்து நிறுத்த நிழல்குடை பராமரிப்பின்றி காணப்படுவதால் பயணிகள் அசௌகரியம்
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் காணப்படும் பேருந்து நிறுத்த நிழற்குடை உரிய பராமரிப்பு இன்றி காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் குறித்த நிழற்குடை நீண்ட காலமாக எவ்வித பராமரிப்பு இன்றியும் கூரை உட்பட அதன் இருக்கைகளும் சேதமடைந்து காணப்படுகிறது.
அன்றாடம் தமது அடிப்படை தேவைகளுக்காக இந்த பேருந்து நிழற்குடை உள்ள இடத்தில் இருந்து பாடசாலை மாணவர்கள் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இவ்விடத்தினை பயன்படுத்துவதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
பிரதான வீதியில் அக்கரைப்பற்று கல்முனை பேருந்து வரும் வரை காத்திருக்கும் வேளைகளில் காகங்கள் மற்றும் இதர பறவைகளின் எச்சங்கள் விசப்பாம்புகளின் அச்சுறுத்தலும் பொதுமக்களுக்கு ஏற்படுகின்றதுடன் இன்று கூட இந்நிழற்குடையினை கால்நடைகளும் தங்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனால் பொதுமக்கள் குறித்த நிழற்குடை உள்ள இடத்தில் இருந்து பயணம் மேற்கொள்ளுவதில் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.
தற்போது அதிக வெயில் காலம் என்பதனால் இதன் கூரைப்பகுதி மற்றும் நிழற்குடையின் சுற்றுச் சூழலை உடனடியாக திருத்தம் செய்து தருமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரானுக்கு பல சலுகை: அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மும்முரம்
யுரேனியம் செறிவூட்டலை கைவிட்டால்
ஈரானுக்கு பல சலுகை:
அமைதி பேச்சுவார்த்தையில்
அமெரிக்கா மும்முரம்
-------------------------------------
யுரேனியம் செறிவூட்டுவதை ஈரான் நிறுத்தினால், அணுமின்சக்தி திட்டத்தில் 30 பில்லியன் டாலர் முதலீடு , தடைகள் நீக்கம், வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்ட பணம் விடுவிப்பு உட்பட பல சலுகைகளை அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
மின்சார உற்பத்திக்கு மட்டுமே அணுசக்தியை பயன்படுத்துவோம் என கூறிவந்த ஈரான், அணு ஆயுதம் தயாரிக்க யுரேனியம் செறிவூட்டும் பணியை தொடங்கியது. இதை தடுத்து நிறுத்துவதற்காக ஈரான் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வந்தது.
இது தொடர்பாக அமெரிக்கா- ஈரான் இடையே 5 கட்ட பேச்சுவார்த்தைகள் ஓமனில் நடந்துவந்தன. 6-வது கட்ட பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்பாக ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. ஈரான் அணு சக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.
ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தீவிரம் அடைந்ததால், அமெரிக்கா ஈரான் அணு சக்தி தளங்கள் மீது சக்திவாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. தற்போது ஈரான் - இஸ்ரேல் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரானை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க அமெரிக்கா தீவிரம் காட்டுகிறது. யுரேனியம் செறிவூட்டலை ஈரான் முற்றிலும் கைவிட்டால், அணு மின்சக்தி உற்பத்தி திட்டத்தில் 30 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு, ஈரான் மீதான தடைகள் நீக்கப்படும், வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்ட ஈரான் பணம் 6 பில்லியன் டாலர் விடுவிக்கப்படும், அமெரிக்கா குண்டு வீசி அழித்த ஃபர்தோ யுரேனியம் செறிவூட்டல் மையம், அணுமின் சக்தி நிலையமாக மாற்றப்படும் என ஏராளமான சலுகைகளை அளிக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் முன்வந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் கூறுகையில்,
‘‘ஈரானுடன் விரிவான அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகிறோம். யுரேனியம் செறிவூட்டலை ஈரான் கைவிட்டு அணு மின்சக்தி திட்டத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன’’ என தெரிவித்தார்.
இஸ்ரேல் - ஈரான் இடையே சண்டைநிறுத்தத்தில் முக்கிய பங்காற்றிய கத்தார், அமெரிக்கா - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து முக்கிய பங்காற்றும் என கூறப்படுகிறது.
AL junaideen
Subscribe to:
Posts
(
Atom
)